ஒரு ஊர்ல ஒரு மரம் இருந்தது அதுல நிறைய குருவிங்க வாழ்ந்துவந்தது. மழைகாலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிக்க போகும் காலம். எல்லா குருவிங்களும் வெப்பம் இருக்கும் நாடுகளுக்கு இடம் பெயர ஆரம்பித்தன ஆனால் ஒரு குருவி மட்டும் 'இந்த தடவை இங்கேயே இருந்து என்னதான் நடக்குதுன்னு பார்த்திடுவோம்னு' அந்த மரத்திலேயே தங்கிவிட்டது.
ஒரு வாரம் ஆச்சி, எல்லா குருவியும் போனபின் இந்த குருவி மட்டும் ஜாலியா சுத்தி திரிஞ்சுது, போட்டியில்லாததனால் சாப்பாட்டுக்கு சிரமம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமா குளிர ஆரம்பிச்சது. ரொம்ப தூரம் பறந்து திரியாம சுத்துப் பட்டியிலேயே சாப்பாட்டு வேலைய முடிச்சிகிச்சி.
இன்னும் 2 நாள் ஆச்சி, ஊரையே தூக்கி freezer'குள்ள வெச்சா மாதிரி செம்ம குளிர். குருவியால பறக்கக்கூட முடியல அப்படியே விரைச்சு போய் மரத்தில இருந்து கீழே விழுந்துவிட்டது. நகரக்கூட முடியல. அப்ப அந்த பக்கமா ஒரு பசு மாடு வந்தது, அது குருவி இருக்கிறத பார்க்காம அது மேலேய சாணி போட்டுச்சு. குருவியால கத்த முடியல, சாணிக்குள்ள மாட்டிகிச்சு ஆனாலும் அப்பதான் போட்ட சாணிங்கறதனால கொஞ்சம் கதகதப்பா இருந்தது. குருவிக்கு கொஞ்சம் தெம்பு வந்தது, உடனே ஜாலியா பாட்டுப் பாட ஆரம்பிச்சது. அப்ப அந்தப் பக்கமா ஒரு பூனை வந்தது, என்னடா சாணிக்குள்ள இருந்து பாட்டு வருதேன்னு சாணிய விலக்கிப் பார்த்தது, உள்ளே குருவி, அடுத்த நொடி பூனைக்கு சுடச்சுட குருவி பிரியாணி.
குருவியின் கதை முடிந்தது, இந்த கதையும் முடிந்தது.
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்:
1. உங்களை தாக்குபவர்களெல்லாம் உங்கள் எதிரிகள் அல்ல
2. உங்களை காப்பாற்றுபவர்களெல்லாம் உங்கள் நன்பர்கள் அல்ல
3. மூடிகிட்டு இருந்தா சாணியில கூட சந்தோஷமா இருக்கலாம்
பி.கு. - இந்த கதையை சொல்லியவர் ஓஷோ
இதுவே இன்றய நிலை. எல்லா நாட்டு அரசாங்களும் அவங்க மக்களை மூடிகிட்டு சும்மா இருங்கனு சொல்லுது. உலகத்திலேயே ரொம்ப கஷ்டமான வேலை சும்மா இருப்பதுதான்.
இதுவும் கடந்துபோகும் என்று நம்புவோம் - வேற வழி
இப்போது இருக்கும் ஊடகங்களின் வன்முறை மிக அதிகமாக இருக்கிறது. குழந்தைகளின் கார்ட்டூன் படத்தில் கூட வெட்டுவேன் குத்துவேன் என்றெல்லாம் வருகிறது கான்பிக்கவும் படுகிறது. தொலைகாட்சி தொடர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம் குடும்பத்தை எப்படி பிரிப்பது, பழி வாங்குதல், துரோகம் போன்ற எதிர்மறையான விஷயங்களே அதிகம் இடம்பெறுகிறது. மற்ற நிகழ்ச்சிகள் எல்லாமே திரைப்படம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவோ, மொழி, கலாச்சாரம், பன்பாடு, பாரம்பரியம் போன்றவற்றை பிரதிபலிக்கும் விதமாகவோ அல்லது மானவர்களின் கல்விக்கு உதவும் விதமாகவோ எந்த நிகழ்ச்சியும் இல்லை. மக்களின் சிந்தனை திறன் வளர/மேம்பட எதுவுமே இல்லை. தொலைக்காட்சிக்கு கண்டிப்பாக தணிக்கை முறை வேண்டும். ஏறக்குறைய எல்லா அலைவரிசைகளும் 24 மனி நேரமும் ஒலி/ஒளி பரப்புகின்றன இதை தடை செய்ய வேண்டும்.
கூட்டுகுடும்ப முறை அழிந்துவிட்டது, பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு போகவேண்டிய சூழலில் பிள்ளைகளின் போக்கு பெரும்பாலும் காலம் கடந்தபின் தான் தெரிகிறது. விளையாட்டு மைதானம் என்ற ஒன்று பள்ளிக்கூடத்தில்கூட இப்போது இல்லை.
திரைப்படங்களில் பள்ளிப் பிள்ளைகள் காதலிப்பது அல்லது காதலுக்கு துனை போவது போலெல்லாம் கான்பிக்கப்படுகிறது இதையெல்லாம் தடை செய்யவேண்டும். திரைப்படங்களுக்கு தணிக்கை இருந்தாலும் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது எல்லா வயதினரும் பார்க்க கேட்க நேரிடுகிறது. இதெல்லாம் முறைப்படுத்த நெறிபடுத்தவேண்டும்.
எங்கேயும் எப்போதும் எது வேண்டுமானாலும் கிடைக்கும்போது, எங்கேயும் எப்போதும் எது வேண்டுமானாலும் நடக்கும்.
நாம் விதைப்பதை நம் பிள்ளைகள்தான் அறுவடை செய்வர்.
அணைவரும் சமூக நலனையும் எதிர்கால சந்ததியினரை மனதில் கொண்டு நடந்திட வேண்டும்.